பிஷப் இவானுக்கு பொன்விழாவா?

Bishopபிஷப் இவான் அம்புரோஸ் 23.12.1967ல் குருப்பட்டம் பெற்றிருக்கிறார். இது 50வது ஆண்டு. இந்த சரித்திர புகழ்பெற்ற நாயகனின் பொன்விழாவை ஏற்கனவே நமது மறைமாவட்டத்திலும் பாண்டிச்சேரியிலும் கொண்டாடி முடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கூட குருப்பட்டம் கொடுத்து திருச்சபையை கெடுத்துள்ளார்களே என்று மறைமாவட்டம் புலம்பிக்கொண்டிருக்கும் இவேளையில் பிஷப் இவானுக்கு மீண்டும் பெரிய அளவில் பொன்விழா ஆசை வந்துள்ளது. இந்த ஆசையை பிஷப் இவான், பாதிரியார்கள் கிருபாகரன், சகாய ஜோசப் மற்றும் நார்பட் ஆகியோரிடம்  வெளிப்படுத்தியுள்ளார் போலும். பிஷப் இவானின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று அப்பணியையே தலைமேல் சுமந்து இப்போது ஊர் ஊராக சென்று பாதிரியார்களையும் மக்களையும் தயார் செய்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் இம்மறைமாவட்டத்தில் இருந்து மறைமாவட்டத்தையே நாசம் செய்து குழப்பங்களையும் குளறுபடிகளையும் ஊழல்களையும் வழக்குகளையும் சொத்தாக குவித்துள்ள இந்த பிஷப் இவான் அம்புரோஸை விரட்டியடிப்பதற்குப்பதில் இன்னும்  பாதிரியார்கள் வால் பிடித்துக் கொண்டு அலைவது வேடிக்கையாக உள்ளது. இன்னும் இவரால் ஏதாவது நன்மை கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சில பாதிரியார்கள் தங்கள் கடமைகளை மறந்து முழுமூச்சுடன் செயல்படுவது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. மொத்தத்தில் தூத்துக்குடி  மறைமாவட்டத்தில் வேடிக்கையே வாடிக்கையாக மாறிவிட்டது.  மனந்திருப்புதல், புற மதத்திலிருந்து ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு மாறுதல் என்பவை குதிரைக்கொம்பாக ஆகிவிட்டது. இவர் வந்த பிறகு பக்தியும் கிறித்தவமும் பறந்துவிட்டன. ஆண்டவர் ஏசு கிறிஸ்து எளிய மனத்தவரைத்தான் பேறுபெற்றவர் என்கிறார். பிஷப் இவான் எளிய மனத்தவரா? அல்லது சாந்தமுள்ளவரா? அல்லது நீதிக்காக பாடுபடுபவரா? தவறு செய்துவிட்டு பிறகு அதை நியாயப்படுத்தவும் அதற்காக வழக்குகள் தொடர்வதும் வக்கீல்கள் பின்னால் அலைவதுமே இவருக்கு வேலை ஆகிவிட்டது. இவருடைய காலத்தையும் நேரத்தையும் பொய் சொல்லுவதிலும் சட்டவிரோதங்கள் செய்வதிலுமே கழித்து விட்டார்.

இவ்விழா எடுக்க சொன்னதே இவர்தான் என்று பேசப்படுகிறது. இவ்விழாவிற்கு அனைத்து குருக்களும் கன்னியர்களும் விசுவாசிகளும் வரவேண்டுமாம். இவ்விழா நிகழ்வுகளையும் போலிப்புகழ் மாலைகளையும் கூட்டத்தையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து மேதகு கர்தினால் மற்றும் மற்றும் வத்திக்கான் அலுவலகத்திற்கு அனுப்பினால் பிஷப் இவான் நல்லவர் வல்லவர் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்களாம். இவர் செய்த அட்டுழியங்கள் அநீதிகள் சட்டவிரோதங்கள் அடாவடித்தனங்கள் அனைத்தும் இந்த விழா மூலம் மறையுமாம். ஒருசில நல்லவர்கள் இவரைப்பற்றி மேதகு கர்தினால் மற்றும் வத்திக்கானுக்கு எழுதியது உண்மையல்ல என்று நிரூபித்துக் காட்ட வேண்டுமாம். மறைமாவட்டமே இவருக்குப் பின்னால் இருக்கிறது என்றும் இவரை புகழ்கிறார்கள் என்றும் இவரை நேசிக்கிறார்கள் என்றும் பாப்பானவருக்கும் பிறருக்கும் தெரியப்படுத்தவேண்டுமாம். தான் ஒரு உத்தமன் என்று நிரூபிக்க வேண்டுமாம். இப்படி பலவாறு பேசப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் உண்மை என தோணுகிறது.

இவர் நல்லவர் என்றால் இந்த மாதிரி விழா எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பார். ஆனால் ஒரு திட்டத்தோடு ஏற்பாடாகிக் கொண்டிருக்கும் இவ்விழாவினை யார் தடுப்பது?  80 வயது ஆகும் வரை நான்தான் தூத்துக்குடி பிஷப் என்று இவர் சொல்லிக்கொண்டு திரிகிறாராம். ஒருவேளை அதற்காகத்தான் இவ்விழாவோ? யாருக்குத் தெரியும்?. கால்வருடிகளுக்கும் தூபம் போடுபவர்களுக்கும்தான் உண்மை தெரியும். இவரை நல்லவர் என்று சொல்பவர்களை நாம் எந்த லிஸ்டில் வைப்பது. உன் நண்பன் யாரெனச் சொல் நான் உன்னை யாரெனச் சொல்கிறேன் என்ற வாக்கியம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. புனித மதர் தெரசாவுக்கு விழா எடுக்கவில்லையே!!! இறந்த பிறகு அல்லவா விழா எடுக்கிறார்கள்!!

Corporate ManagerPromotion orderEsacki letterஇவ்விழா அர்த்தமற்ற கிறிஸ்தவ வாழ்விற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமையும். மேலும் இவ்விழாவினை எடுக்கும் பாதிரியார்களையோ அல்லது ஆசிரியர்களையோ இவர் கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் பிஷப் இவான் தனது மேனேஜர் ஆஃப் ஆர்.சி ஸ்கூல்ஸ், தூத்துக்குடி மறைமாவட்டம் என்ற பதவியினை மாற்றி கார்பரேட் மேனேஜர் ஆர்.சி பள்ளிகள் தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்று மாற்றியிருக்கிறார். இதை இசக்கியை தவிர எந்த பாதிரியாருக்காவது, தலைமை ஆசிரியருக்காவது, ஆசிரியருக்காவது  அப்பிஷியலாக தெரியப்படுத்தியுள்ளாரா என்றால் இல்லை. இதுதான் அராஜகம் என்பது. சித்தன் போக்கு சிவன் போக்கு மாதிரி செயல்படுகிறார். இதை ஏன் மாற்றினார் என்பதுதான் ரகசியம். லட்டர் பேடு மாற்றப்பட்டுள்ளது என்ற விவரம் எத்தனை பாதிரியார்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியும்? எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஆர்டர்கள், சுற்றறிக்கைகளை பார்த்தால் வித்தியாசம் தெரியும். இவர் கார்பரேட் மேனேஜராக ஆகியிருப்பது பாதிரியார்களுக்கும் பள்ளிகளுக்கும்தான் தெரியாது என்று நினைக்காதீர்கள். கல்வித்துறைக்கும் தெரியாது. இது ஒரு உதாரணம்தான். எத்தனை பொய்கள் சொல்லி வருகிறார் என்பது ஆவே மரியாவுக்கு தெரியும். இவரது பொய்களுக்கு நூற்றுக் கணக்கான் ஆதாரங்கள் உள்ளன. மேனேஜ்மெண்டே மாறிட்டுங்கோ!!!

இப்படி இரகசியமாக முடிவுகள் எடுத்து சட்டவிரோதங்கள் செய்து பித்தலாட்டம் செய்யும் இந்த  பிஷப் இவானுக்கு ஒரு பொய்யான விழா எடுக்க வேண்டுமா? பாதிரியார்கள் சற்று சிந்திக்கலாமே!!!

ஒருவேளை இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளுக்கேற்ற வகையில் தீமை மட்டுமே செய்துள்ள இவான் வெட்கப்பட வேண்டும், நாணி தலை குனிய வேண்டும் என்ற நோக்கில் இவ்விழாவினை நடத்தி கூட இருக்கிற பாதிரியார்களே தண்டிக்க நினைக்கிறார்களோ?

அல்லது எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல என்ற அடிப்படையில் இந்த தீய பிஷப் இவான் அம்புடோஸுக்கு விழா எடுத்து கேவலப்படுத்த நினைக்கிறார்களோ?

பலரும் பல கோணங்களில் சிந்தித்து புலம்புகிறார்கள்.