சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதி

சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி பிஷப் இவான் அம்புடோஸால் திடுதிடுப்பென்று ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சமூகத்தினரை திருப்தி படுத்துவதற்காக புனித தாமஸ் மெட்ரிக் பள்ளியின் வருமானத்தில் இருந்து பணம் வாங்கி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடம் அமைந்துள்ள இடத்தை சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளிக்கும் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் விளையாட்டிடமாக தெரிவித்து அதனடிப்படையில் அங்கீகாரமும் நிதி உதவியும் பெற்று வருவதை மறைத்து பல குல்மால்கள் செய்து ஊழல் பேர்வழி திரு இராமேஸ்வர முருகன் அவர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் போது ஒரு சில நொடிகளில் துவக்க அனுமதி பெறப்பட்டது தெரியவருகிறது. திரு இராமேஸ்வர முருகன் பற்றி அறிய கீழ்காணும் இணைப்புக்கு செல்க. https://tamil.oneindia.com/news/tamilnadu/s-kannappan-appoints-new-school-education-director-216619.html மேலும் சம்மந்தப்பட்ட நிர்வாகம் மைனாரிட்டி நிர்வாகமாக பாவிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரு கோயில் ராஜ் என்பார் இது சார்பாக புகார் கொடுத்துள்ளார். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தவறு செய்துள்ளது அப்புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகத்தினரோடு சேர்ந்து கொண்டு விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்கள் அப்பள்ளியை பார்வையிட்டதாகவும் விசாரணை மேற்கொண்டதாகவும் படம் காட்டி மனுதாரரை விசாரிக்காமலும் அவரிடம் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்யாமலும் எல்லாம் சரியாக உள்ளது என்று தனது ந.க.எண்.377/அ/2017 நாள் 14.11.2017 கடிதத்தில் தெரிவித்துள்ளார். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டிருக்கிறார். மேற்படி திரு. கோயில்ராஜ் எனபாரின் புகார் மனுவும் அன்னாரின் புகார் மனுவினை பரிசீலனை செய்ததாக கூறி அன்னாருக்கு தெரிவித்த கடித நகலும் இதோ. ஆவண ஆதாரங்களின் உதவியுடன் மனுதாரரை விசாரிக்காமல் பள்ளி துவக்க அனுமதி பெற்றதை நியாயப்படுத்தி எழுதியுள்ள விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்களின் கடிதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர் தனது கடமையை சரியாக செய்யாத குற்றத்திற்குள்ளாகியுள்ளார்.

திரு கோயில்ராஜ் என்பாரின் புகார் மனு Mr.Koilraj’s Complaint

விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்களின் கடிதம் IMS Letter in response to Mr. Koilraj’s Complaint letter

 

Bishop Yvon Ambroise’s Activities have become childish

Bishop Yvon Ambroise has become a child now. His activities are becoming childish. We give an example here. In the affidavit in W.P.No.11437/2017 filed by the Tuticorin Diocesan Association to retrieve FCRA Number Father Sahaya Joseph has told several lies. You can read and understand the lies. WP.No.11437 of 2017 Affidavit The Society tells that it runs several institutions including 31 technical institutes, homes and hospitals. Thus, by telling several lies before the Hon’ble court this society has obtained an interim stay order against the central government which banned its FCRA number. Our Association has submitted impleading petition. We requested various departments to give the details of institutions which are mentioned in the affidavit. One of the requests was made before the Directorate of Technical Institutions, Chennai, to give the details of 31 technical institutions being run by Bishop Yvon’s society. Details of 31 technical institutions requested through this letter The Directorate requested the President of the Tuticorin Diocesan Association to give the details. Reply letters received from Director of Technical Institutions The Director of Technical Institutions has sent the copy of letter sent by Bishop Yvon Ambroise. In the childish letter bishop yvon says that instead of typing 1 it was typed as 31. Further, he has said that an amendment affidavit has been filed before the Hon’ble Court. Bishop Yvon’s Childish reply sent to the Director Such a huge difference in typing. 

Ok. Let it be like that. The society filed Writ petition No.3061/2014. In that affidavit the total Educational Institutions was mentioned as 261. We are giving the particular page of the affidavit here. Page 3 of the affidavit filed in WP.No.3061 of 2014 It includes this 31 institutions. Is this a typing mistake? What is interesting is that this case was disposed on 03.07.2015 by considering the lies submitted by the society. Can the Bishop file amendment affidavit?

Page 1 of Court order in W.P 3061 of 2014

Page 2 of Court order in W.P 3061 of 2014

Page 3 of Court order in W.P 3061 of 2014

Page 4 of Court order in W.P 3061 of 2014

Page 5 of Court order in W.P 3061 of 2014

It is a pity that this Childish Bishop has been trapped by the advisers. Then what happened to WP.No.7587/2012 in which also he got stay order by telling these lies before the Hon’ble Court? Affidavit filed in WP.No.7587 of 2012

If the members of the society know the addresses of the institutions and the details of the agents who run the institutions as mentioned in the WP.No.11437/2017, please inform us. Because the departments concerned do not know them. 

Many teachers and innocent hard-working fathers have been punished illegally by this arrogant Bishop, the best liar in the Catholic Church. But there is no punishment to this liar who involved in many criminal offenses. He is a shame to Roman Catholic Church. He has become childish and has lost memories. He also has become silly in his behaviour. Even then our Church allows him to continue as Bishop in Tuticorin, as the President of the Tuticorin Diocesan Association, as the Manager of R.C.Schools, and as Corporate Manager of R.C.Schools.  

Only a few Fathers raise voice against this arrogant Bishop. But they are suppressed by this liar. The fathers should be models to raise voice against injustice. What come may!!!

We hope His Excellency the Apostolic Nuncio of India would take appropriate action against this liar Bishop immediately. We have a lot of proofs for his illegalities and criminal activities. 

அண்டப்புளுகு ஆசாமி பிஷப் இவான் அம்புரோஸ் 31 தொழில் நுட்ப கல்லூரி நடத்துறாராம், 13 ஆஸ்பத்திரி நடத்துறாராம், 9 டிஸ்பென்சரி நடத்துறாராம், நர்சிங் பள்ளி நடத்துறாராம், மது அருந்துவோருக்கான மருவாழ்வு மையம் நடத்துறாராம், லெப்ரசி இல்லம் நடத்துறாராம், 11 பொது ஆர்பனேஜ் நடத்துறாராம், 10 பெண் குழந்தைகளுக்கான ஆர்பனேஜ் நடத்துறாராம், 6 ஆண் குழந்தைகளுக்கான ஆர்பனேஜ் நடத்துறாராம், 6 க்ரெச் நடத்துறாராம், 4 ஹோம் ஃபார் டெஸ்டிட்யூட் நடத்துறாராம், 4 ஊனமுற்றோருக்கான இல்லம் நடத்துறாராம், 2 முதியோர் இல்லம் நடத்துறாராம், 1 ரெஸ்க்யூ இல்லம் நடத்துறாராம், 1 பெண்கள் நல இல்லம் நடத்துறாராம், 1 மன வளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் நடத்துறாராம். என்ன தலை சுற்றுதா? இதெல்லாம் எங்க நடக்குதுன்னு பிஷப்கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளலாம். அரசு அதிகாரிகளுக்கு இவைகள் எங்கு நடக்கின்றன என்பது தெரியவில்லை.

100000 மாணவர்கள் தற்சமயம் பலன் பெறுகிறார்களாம். பள்ளிக்கூடங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து குடுக்குறாராம். அதுவும் கணக்கிடமுடியாத அளவுக்கு செய்றாராம்!!! பள்ளிக்கூடங்கள் எல்லாமே லாப நோக்கத்திற்காக நடத்தப்படவில்லையாம். இதற்கிடையில் எல்லா பள்ளிக்கூடங்களும் மைனாரிட்டி நிறுவனங்களாம். இவரு போய் வாங்கிட்டு வந்தாராம்.

300 கிராமங்களில் ஹெல்த் ப்ராஜெக்ட் பண்ணுறாராம். 2800 கக்கூஸ் கட்டி குடுத்துருக்காராம். அதுவும் தனிப்பட்ட பயனாளிகளுக்கும் பொதுப்பயன்பாட்டிற்குமாம். ஆயிரக் கணக்கில் சுய உதவி குழுக்கள் நடத்துறாராம்.

அதைவிட ஒரு படி மேலே ஏறி 450 வருஷமா சேவை செய்கிறார்களாம். அதாவது 1937ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சொசைட்டி 450 வருஷமா சேவை செய்றதாம்!!!

Only for the legal perpetuity, these organizations are registered as societies. அப்படின்னா என்னங்கோ..?

இவரு மட்டும் இவருக்கு தகுந்தாற்போல எழுதுவாராம். வாத்தியாருங்க இருமுனா தப்பாம்?  இவரு செஞ்சா எதுவுமே தப்பில்லையாம். களவு எடுப்பாராம். பொய் சொல்லுவாராம். போலி ஆவணங்கள் தயார் பண்ணுவாராம். ஊருல இல்லாத அத்தனை திருட்டுத்தனத்தையும் பண்ணுவாராம். அது தப்பில்லையாம்.  இவருக்கு வேண்டிய ஆள் என்றால் ரூபாய் செலவழித்து தப்பு பண்ணுனவன கூட காப்பாத்துவாராம்.  ஆனா வேண்டாத ஆள் என்றால் தப்பு செய்யாதவனையும் பணம் செலவழித்து தண்டிப்பாராம். 

உயிரோடு இருந்த பாதிரியார் ரொசாரியோ பெர்னாண்டோவை செத்துட்டாருன்னு கோர்ட்ல பொய் சொன்ன பொய்யாங்கண்ணி. 18.05.2005லிருந்தே இவரு கார்பரேட் மேனேஜராம். வெக்கமில்லாமல் பொய் சொல்லிட்டு தான் நல்லவன் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.

நியாயத்த கேட்டா திருச்சபையை விட்டு விலக்குவேன் என்று பயமுறுத்துவாராம். ஏற்கனவே இவரு வந்த பிறகு தானாக திருச்சபையை விட்டு எத்தனையோ பேர் ஓடிட்டாங்கன்னு இவருக்கு தெரியாதா என்ன? ஓடுனவங்கள பிடிக்கிறத விட்டுட்டு இருக்கிறவன விரட்ட பாக்குறாரு. 

 

பிஷப் இவானும் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரும்

பிஷப் இவான் அம்புரோஸ் திடீரென தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று மாற்றிக் கொண்டார். தனது லெட்டர் பேடை மாற்றிக் கொண்டார். பள்ளிகளை நடத்துவது தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்பதாக லெட்டர் பேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இசக்கியும் பதவியை மாற்றிக் கொண்டார். பிஷப் 18.05.2005 லேயே மேனேஜர் ஆப் ஆர்.சி ஸ்கூல்ஸ் என்று நியமனம் பெற்றதாக 13.07.2016 அன்று இசக்கியிடம் ஒரு ஆர்டரை வாங்கி அதன் நகலினை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சங்க செயலர் திரு. பீட்டர் ராஜிடம் ஒப்படைத்தார். பிஷப் 28.09.2005ல் தான் தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற சொசைட்டியில் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் அந்த சொசைட்டிக்கு 18.05.2005லேயே எப்படி தலைவராக முடியும் என்ற கேள்வியை எழுப்பியவுடன் தானைத் தலைவர் வந்திக்கத்தக்க இவான் கீழ்கண்ட லெட்டரை ஆவே மரியா சங்கத்தின் செயலருக்கு எழுதினார். Bishop letter dated 28.12.2017 மனுஷன் உளறி கொட்டியிருக்கிறார். சாதாரணமாக பதில் தர மாட்டார். அவரு பப்ளிக் அதாரிட்டி இல்லையாம்!!! புத்திசாலி பிஷப்!!! இப்போ மட்டும் பதில் எப்படி கொடுத்தார் என்பது தெரியவில்லை. இவரு மட்டும்தான் புத்திசாலி என்ற நினைப்பு இவருக்கு.

சங்க செயலர் விடவில்லை. 2005ம் வருடம் முதல் கூட்டத்திலேயே எமது சங்கத்தை ஆவே மரியாவா? ஈவ் மரியாவா? என்று கிண்டல் அடித்த மேதாவி அல்லவா இவர். மேற்படி கடிதத்தை இணைத்து தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவலறியும் சட்டத்தின் கீழ் சில தகவல்களை வேண்டினார். RTI Petition to DEO on the basis of Bishop letter dated 28.12.2017

மேற்படி தகவலறியும் மனுவிற்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பதில் தருவதற்கு பதிலாக அதிமேதாவி வந்திக்கத்தக்க இவானுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டு பதிலை தருமாறு மீண்டும் இந்த வந்திக்கத்தக்க இவான் அம்புரோஸ் பிஷப்புக்கே அனுப்பியுள்ளார். வேடிக்கை என்னவென்றால் மேற்படி பிஷப் இவான் தன்னை கார்பரேட் மேனேஜர் என்று சொல்லுகிறார். கல்வி முகமையை மாற்றி தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்று சொல்லுகிறார். ஆனால் மாவட்ட கல்வி அலுவலர் எனக்கு தகவல் கொடுக்கும்படி மேலாளருக்கு அனுப்பின கடிதத்தில் மேலாளர், ஆர்.சி.பள்ளிகள், தூத்துக்குடி மறைமாவட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். என்ன ஒரு கோவாப்பரேஷன் பார்த்தீர்களா? மாவட்ட கல்வி அலுவலரின் கடிதம் இதோ Letter of Thoothukudi DEO in reply to RTI petition

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் வழக்கமாக தகவலறியும் மனுவிற்கு பதில் எழுத மாவட்ட கல்வி அலுவலர் பிஷப் இவானுக்கு எழுதுவார். உடனே பிஷப் தகவலறியும் மனுவிற்கு தான் பப்ளிக் அதாரிட்டி இல்லாததால் பதில் தரவேண்டியதில்லை என்று பதில் கொடுப்பார். மாவட்ட கல்வி அலுவலர் புத்திசாலித்தனமாக அதையே தகவலறியும் மனுவிற்குப் பதில் என்று மனுதாரருக்கு அனுப்பிவிடுவார். இது கல்வித்துறையும் பிஷப்பும் நடத்தும் நாடகம். பிஷப் எழுதிய ஒரு கடிதம் பிரசுரிக்கப்படுகிறது. Bishop syas he is not a public authority ஆனால் வேற வழியில்லாமல் சங்க செயலருக்கு பத்தி 1ல் காணும் 28.12.2017 நாளிட்ட கடிதம் மூலம் தகவல் தந்துள்ளார். அதுவும் தவறான தகவல்கள். மாவட்ட கல்வி அலுவலகம் என்ன செய்கிறது என்பதே தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் முதன்மை கல்வி அலுவலர்களையும் மாவட்ட கல்வி அலுவலர்களையும் மேதாவி பிஷப் இவான் அம்புரோஸ் உடனே விலைக்கு வாங்கிவிடுகிறார். அல்லது கீழ்காணும் கடிதத்தின் மூலம் இவான் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மேலதிகாரி ஆணையிட்ட பிறகும் முதன்மை கல்வி அலுவலரும் மாவட்ட கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்களா?  இப்படி நிறைய ஆதாரங்கள் எமது சங்கத்தில் உள்ளன.

JD letter to CEOJD lettet to DEO

இசக்கி தனது பதவியை மாற்றியுள்ளமைக்கு ஆதாரம் இதோ. Esacki’s letter as a proof that he has changed the eduactional agency and his post

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் விவரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும்  ஊழல் இல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு மெத்தப்படித்த மேதாவி பிஷப் இவான் அம்புஎரோஸுக்கும், தனது பெயரையே மாற்றிக் கொண்டு கண்காணிப்பாளராக செயல்படும் கிரிமினல் இசக்கிக்கும், வாலசைக்கும் அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வேண்டாம் என்று பொதுமக்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் சீல் கண்ட இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு ஜீப்பில் ஜாலியாக ஊர் சுற்றும் சிலர்தான் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பில் உள்ளனர். இது அலுவலக ஊழலுக்கு வழிவகுக்கிறது. எடுத்துக் காட்டாக திரு நரசிம்மன், திருமதி செந்தூர்கனி மற்றும் திருமதி கிறிஸ்டி போன்றோரை கூறலாம். இவர்கள் எல்லாம் பிஷப் இவானுக்கும் இசக்கிக்கும் கையாட்கள். கையெழுத்து போட மட்டுமா சம்பளம். கோப்புகளை வாசித்து விதிகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவெடுக்கவேண்டாமா?

கும்புடு போட்டுட்டு குடுக்கிற பேப்பர வாங்கிட்டு நீட்டுற இடத்துல கையெழுத்து போடுறதுக்கா அரசு இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது?