ஒரே சட்டம் வேண்டும்!!! பாகுபாடு வேண்டாம்!!!

minority1

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே 10.10.2012 நாளிட்ட ஆணையில் New Comprehensive Act நடைமுறைக்கு வரும் வரை 17.12.1975ல் உள்ளபடி Status quo என்று ஆணையிட்டுள்ளது என்பது கல்வித்துறைக்கும் அரசுக்கும் நிர்வாகங்களுக்கும் தெரியும். இவ்வழக்கில் அரசு இன்னும் தொடர் நடவடிக்கை எடுக்காததால் எத்தனையோ ஆசிரியர்கள் மைனாரிட்டி என்ற பெயரில் பல்வேறு துன்பத்துக்கு ஆளாகிறார்கள். அனைத்து வகை உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் சம்பளம் கொடுப்பது அரசு. ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் Service Conditions ஒரே மாதிரியாக உள்ளது. அப்படியிருக்க மைனாரிட்டி பள்ளி ஆசிரியர்கள் மட்டும் மேல்முறையீட்டு உரிமை இல்லாது அவதிப்படுகிறார்கள். கல்வித்துறையின் அனுமதி இன்றி பல்வேறு ஆசிரியர்கள் பணியிலிருந்து வெளியில் தள்ளப்படுகிறார்கள். இது பாகுபாடான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்புமா? சமத்துவம் இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்கள் அல்லோல் படுகிறார்கள். மைனாரிட்டி நிறுவனங்கள் தாண்டவம் ஆடுகின்றன. சமத்துவத்தை உருவாக்க ஒரே சட்டம் தேவைப்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை இவ்வழக்கின் ஆணை நகல் கிடைத்தவுடன் சங்கம் முடிவு செய்யும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *